அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவு குறித்து கூறினார்.

Make deal or there will be bombing: Trump threatens Iran over nuclear  agreement

அப்போது அவர் கூறுகையில், ‘அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈரான் உடன்படவில்லை என்றால், அந்நாட்டின் மீது குண்டுகளை வீசுவோம். எதிர்காலத்தில் ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கு முன்பு கண்டிராத தாக்குதல்கள் நடத்தப்படும். ஈரானுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிடும். எனவே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈரான் உடன்பட வேண்டும். புதிய மற்றும் தெளிவான ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொள்ள வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு தான் தயாராக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் தெரிவித்தார். நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக 2 மாத காலக்கெடு விதிக்கப்படுவதாகவும் அந்த கடிதத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்திற்கு ஈரான் அதிபர் ஷெஹ்சாதே கடுமையாக பதிலளித்தார். அதற்கு அவர், ‘டிரம்புடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை. அவர் எங்களுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதேநேரம் மறைமுக பேச்சுவார்த்தைகளுக்கான பாதை திறந்தே உள்ளது’ என்றார்.

ஈரான் அதிபரின் கருத்துகள் வெளியான நிலையில் தற்போது டிரம்ப் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், தனது முதல் பதவிக்காலத்தில் (2017-21), அதாவது 2018ம் ஆண்டு முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் போது ஈரானுடன் எட்டப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் முறித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *