பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்த சூழலில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதை தடுக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக இருநாட்டு தலைவர்களுடன் அமெரிக்கா இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதை தடுக்க அமெரிக்கா முயற்சி நடத்தி வருகிறது. மேலும் பஹல்காம் தொடர்பான நடவடிக்கைகளில் இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமருக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
காஷ்மீரில் கடந்த வாரம் நடந்த பஹல்காம் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. அங்கு சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேரை தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டு கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியுள்ளது. இதற்கு பதிலடியாக இந்திய விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த கூடாது என பாகிஸ்தான் தடை விதித்திருக்கிறது. அதே நேரத்தில், இந்திய வான் பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கவும் ஒன்றிய அரசு தடை விதித்திருக்கிறது. இந்த நடைமுறை வரும் 23ம்தேதி வரை அமலில் இருக்கும் என இந்தியா தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளும் தங்களுடைய வான்வெளியை பரஸ்பரம் பயன்படுத்த முடியாத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளன.
பஹல்காமில் நடந்த தாக்குதலைக் கண்டிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் அப்போது அவர் தெரிவித்தார். தீவிரவாதிகளின் கொடூரமான வன்முறைச் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்க வைப்பதில், இந்த நியாயமற்ற தாக்குதலை பற்றி விசாரிப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவும் அவர் வலியுறுத்தினார்’ என்று தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோவை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று பீட் ஹெக்சேத், ஒன்றிய பாதுகாப்புச் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பஹல்காம் தாக்குதல் குறித்து கேட்டறிந்தார். அப்போது, ‘உலகம் முழுவதும் தீவிரவாதத்தை தூண்டிவிட்டு, நிலையற்ற தன்மைக்கு உள்ளாக்கும் ஒரு முரட்டு நாடாக பாகிஸ்தான் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளித்து வந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகம் இனி கண்ணை மூடிக்கொண்டு தீவிரவாதத்தை அணுக முடியாது’ என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத்,’ பஹல்காம் தாக்குதலை பொறுத்தவரையில் அமெரிக்கா இந்தியாவுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது. இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை ஆதரிக்கிறது’ என்றார். இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சகம் வௌியிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போரை தடுக்க அடுத்தடுத்து அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.