காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களின் விவரம் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரின் விவரம் தெரியவந்துள்ளது. மருத்துவர் பரமேஸ்வரன் (31) (சென்னை), சந்துரு(83), பாலச்சந்திரா(57) ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.