சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எத்தனையோ பேருக்கு துரோகம் செய்தவர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியின்போது முதல்வர் பதவியை தக்க வைக்க தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தவர் பழனிசாமி.

மின்வெட்டு புகார் கூறிய இ.பி.எஸ்; நேரில் அழைத்துச் சென்று விளக்குகிறேன் என  செந்தில் பாலாஜி பதில்

புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை அனைத்தையும் அறம் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்த்தவர் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி எப்படிப்பட்ட அரசியல் வியாபாரி என்பது அவரை சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும். பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களை பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *