தாக்குவதை நிறுத்தினால் நாங்களும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசீப் கூறினார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசீப் அளித்த பேட்டியில்,பாகிஸ்தான் தாக்கப்பட்டால் மட்டுமே பதிலடி கொடுக்கும் என்று கூறியதாக புளூம்பெர்க் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அவர் அளித்த பேட்டியில் கூறுகையில்,‘‘கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம் என்று கூறி வருகிறோம். ஆனால் நாங்கள் தாக்கப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம். தாக்குதலை நிறுத்தி இந்தியா பின்வாங்கினால், நிச்சயமாக பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்’’ என்று தெரிவித்தார்.