திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். குமரியில் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
குமரியில் உள்ள சாலைக்கு அய்யன் திருவள்ளுவர் சாலை என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
திருவள்ளுவர் பசுமை பூங்காவை திறந்து வைத்து திருக்குறள் கண்காட்சியை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கினார்.