மியான்மரில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவானது.
மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்போது பலி எண்ணிக்கை என்பது 1,000யை கடந்துள்ளது. ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தை தொடலாம் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கி 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் நடக்கும்நிலையில், நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.