Month: May 2025

புதிய போப் ஆக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு !

புதிய போப் ஆக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 21ம் தேதி காலமானார். லட்சக்கணக்கானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில்…

” தாக்குவதை நிறுத்தினால் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் !

தாக்குவதை நிறுத்தினால் நாங்களும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசீப் கூறினார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசீப் அளித்த பேட்டியில்,பாகிஸ்தான் தாக்கப்பட்டால் மட்டுமே பதிலடி கொடுக்கும் என்று கூறியதாக புளூம்பெர்க் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.…

“பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி கொடுக்க இந்தியா தயார்” – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை பற்றி அமெரிக்கா, இங்கிலாந்து,சவுதி அரேபியா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாகிஸ்தான் மற்றும்…

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் !

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. முடிவுகள் எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள்…

ஆபரேஷன் சிந்தூர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு !

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும்; தேச நலன் கருதி நமது ராணுவத்துக்கு என்றும் துணை நிற்போம் என்று கூறினார்.

“‘ஆபரேஷன் சிந்தூர்” – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து !

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் தனது கருத்தை அமெரிக்க…

‘ஆபரேஷன் சிந்தூர்’ – நள்ளிரவில் தாக்குதல் நடந்தது எப்படி ?

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்தது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது…

” 2026-ல் இந்தியாவில் ரூ.3,37,013 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் தயாரிக்கப்படும்” – ஆப்பிள் நிறுவனம் !

2026-ல் இந்தியாவில் ரூ.3,37,013 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் தயாரிக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா மீது ஏற்றுமதி வரியை பரஸ்பரமாக உயர்த்தி உள்ளார். இதனால் இருநாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நீடித்து வருகிறது. ஐபோன் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக…

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல், 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆந்திராவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவில் நாளை முதல்…

இந்தியா – பாகிஸ்தான் போர்? : நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு !

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போருக்கு தயாராகி வரும் பதற்றமான சூழலில், நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எதிரிநாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின்…