Tag: #india #pakistan

போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் முதல்முறையாக பேச்சுவார்த்தை !

புதுடெல்லி: போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்தில் நேற்று முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போர் கடந்த சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (டிஜிஎம்ஓக்கள்)நேற்று மதியம் 12…

எந்தவிதமான தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா தயார்: முப்படை அறிவிப்பு !

ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் ஆபரேஷன் சிந்தூா் குறித்து நேற்று விளக்கம் அளித்தனர். அதன் விவரம் வருமாறு: விமானப்படை இயக்கத்…

ஜம்மு- காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் !

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தொடர்ந்து குண்டு வெடிப்பு சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஜம்மு- காஷ்மீரின் 5 எல்லையோர மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க…

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை !

போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல், பதிலடி தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், சேதங்கள் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.

” தாக்குவதை நிறுத்தினால் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் !

தாக்குவதை நிறுத்தினால் நாங்களும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசீப் கூறினார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசீப் அளித்த பேட்டியில்,பாகிஸ்தான் தாக்கப்பட்டால் மட்டுமே பதிலடி கொடுக்கும் என்று கூறியதாக புளூம்பெர்க் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.…

ஆபரேஷன் சிந்தூர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு !

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும்; தேச நலன் கருதி நமது ராணுவத்துக்கு என்றும் துணை நிற்போம் என்று கூறினார்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ – நள்ளிரவில் தாக்குதல் நடந்தது எப்படி ?

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்தது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது…

பஹல்காம் தாக்குதல் – எங்களுக்கு தொடர்பு இல்லை, பாகிஸ்தானை சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும்’ : இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டி வருவதுடன், அந்த நாட்டுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அதேநேரம் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று நேற்று பாகிஸ்தான் வழக்கம்போல மறுத்து வருகிறது. முன்னதாக அந்நாட்டு ராணுவ செய்தி…

“இந்தியாவுக்காகவே எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் உள்ளன” – மிரட்டும் பாகிஸ்தான் !

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாசி பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர், ‘‘சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால், அவர்களுக்கு போரை…

இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி – சிம்லா ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், இந்திய விமானங்களுக்கு தடை : உத்தரவுகளை பிறப்பித்தது பாகிஸ்தான் !

இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக சிம்லா ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், இந்திய விமானங்களுக்கு தடை என பல்வேறு உத்தரவுகளை பாகிஸ்தான் பிறப்பித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு…