மியான்மர் நாட்டில் நள்ளிரவு 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் அண்மையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அவ்வப்போது மியான்மரில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.
இதைத்தொடர்ந்து, பிஜி தீவுகளில் நள்ளிரவு 1.32 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில், தாஜிகிஸ்தானில் காலை 6.14 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.