பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார். அங்கு பிரதமர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யாவின் கசான் நகரத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, ஈரான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கிறது.

Look forward to extensive discussions…': PM Modi leaves for Russia to  attend BRICS Summit | India News - The Indian Express

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
உலகளாவிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரல், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, பருவநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், ஊக்குவித்தல் போன்ற பிரச்சனைகளில் உரையாடல் மற்றும் விவாதத்திற்கான முக்கிய தளமாக பிரிக்ஸ் நாடுகளுக்குள் இருக்கும் நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது.

பிரிக்ஸ்: அமெரிக்க டாலருக்கு போட்டியாக பொது நாணயமா? இந்தியா, சீனா  நிலைப்பாடு என்ன? - BBC News தமிழ்

கசான் பயணமானது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான “சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி கூறினார். ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய அமைதியின்மையை அடுத்து இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *