புதுடெல்லி: சீனாவில் எச்.எம்.பி.வி வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் அதன் தாக்கம் குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா, தெலங்கான அரசுகள் அறிவுரைகளை வழங்கி உள்ளன. சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சீன நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் அனைத்து பகுதிகளிலும் மலையாளிகள் இருப்பதால், சீனா உள்பட வெளிநாட்டவர்கள் அடிக்கடி மாநிலத்திற்கு வருவதால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். இருப்பினும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தெலங்கானாவின் பொது சுகாதார இயக்குனர் பி.ஆர்.அவிந்தர் நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெலங்கானா மாநிலத்தில் இதுவரை எச்.எம்.பி.சி. பாதிப்பு பற்றி எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சர்வதேச சுகாதார அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சீனாவில் பரவி வரும் சுவாச நோய்கள் தொடர்பாக அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. எச்.எம்.பி.வி வைரசால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் கவலைப்பட வேண்டாம். சீனாவில் வழக்கத்திற்கு மாறான நிலை இல்லை. சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் அளிக்கும் தகவல்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது’ என்று தெரிவிக்கபட்டுள்ளது.