காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற 3 தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தாக்குதலில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Pakistanis told to leave; border shut, visas revoked: India's tough stand  after Pahalgam attack, Pakistan, india, pakistani, terror attack, Pakistani  terrorist attack, jammu kashmir, visa, border

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேறவும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது. காஷ்மீரில் முக்கியமான சுற்றுலா பகுதிகளில் ஒன்றான பஹல்காம் மாவட்டத்தின் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தீவிரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

பைன் மரக் காடுகள் வழியாக பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளை பிடித்து அவர்களின் பெயரை கேட்டு கொடூரமாக சுட்டுக் கொன்றனர். இதில், 26 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். இவர்கள் 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நேபாளத்தை சேர்ந்த ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுதவிர 20 பேர் காயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக டெல்லியிலிருந்து புறப்பட்டு காஷ்மீர் சென்றார்.

சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு இந்தியா புறப்பட்டார். பெரு நாட்டிற்கு சென்ற ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பாதியிலேயே பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ட் படை (டிஆர்எப்) பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இது. இதற்கு காரணமானவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா முழுவதும் குரல்கள் எழுந்துள்ளன.

இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்தை நேற்று நேரில் ஆய்வு செய்தார். சவுதியில் இருந்து காலையில் பிரதமர் மோடி டெல்லி வந்ததும், அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து மாலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரது தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் இருந்து தப்பிய சுற்றுலா பயணிகள் அளித்த தகவல்கள் மற்றும் அடையாளங்களின் அடிப்படையில் 3 தீவிரவாதிகளின் வரைபடங்களை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது.

அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாசவேலையின் பின்னணியில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பதால் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சார்க் விசா திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

All Pakistan Nationals Should Leave India Within 48 Hours: MEA After  Pahalgam Terror Attack | Times Now

ஏற்கனவே விசா பெற்று இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை 55இல் இருந்து 30 ஆக குறைப்பு. மீதமுள்ள தூதரக அதிகாரிகள் அனைவரும் நாட்டை விட்டு வரும் மே 1 ஆம் தேதிக்குள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையும் குறைக்கப்படும். பாகிஸ்தானுடனான அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் நேற்று இரவு வெளியிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *