சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
பன்னீர்செல்வம், தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர், வீரமுத்துவேல், இஸ்ரோ விஞ்ஞானி, முரளிதரன், தனியார் தொழில்நுட்ப நிறுவன CEO, சந்திரசேகர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.