Author: Tamil Kelvi

“தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்’ – உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டார் குடியரசுத்தலைவர் !

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் கேட்டார். சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் விளக்கத்தை கேட்டுள்ளார். அரசியல் சாசன பிரிவு 143(1) மூலம் குடியரசுத் தலைவர் வழியாக மத்திய அரசு அணுகி உள்ளது. மசோதாக்கள்…

“உயர்கல்வியில் சேருகின்ற மாணவர்களின் சதவீதம் உயர்வு” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லூரி கனவு-2025 நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் காணொலி காட்சி வாயிலாக திட்டத்தை…

“வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள்”- மீண்டும் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் !

ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சவுதி அரேபியா சென்றுள்ளார். அங்கு அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியதாவது, நான் பதவி ஏற்ற நாளிலேயே…

“பொள்ளாச்சி வன்கொடுமை கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது நடந்த பெண்களுக்கு எதிரான பொள்ளாச்சி வன்கொடுமை கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:…

கடந்த 10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடல் – வெளியான அதிர்ச்சித் தகவல் !

கடந்த 10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மராத்திய அமைப்புகள் மாநில அரசை குற்றம் சாட்டி வருகின்றன.மும்பை முழுவதிலும் கடந்த 10 ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 40…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : இன்று தீர்ப்பு !

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறார்கள். சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றம் சாட்டப்பட்ட சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு ஆகியோர்…

போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் முதல்முறையாக பேச்சுவார்த்தை !

புதுடெல்லி: போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்தில் நேற்று முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போர் கடந்த சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (டிஜிஎம்ஓக்கள்)நேற்று மதியம் 12…

எந்தவிதமான தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா தயார்: முப்படை அறிவிப்பு !

ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் ஆபரேஷன் சிந்தூா் குறித்து நேற்று விளக்கம் அளித்தனர். அதன் விவரம் வருமாறு: விமானப்படை இயக்கத்…

“தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்யும்” – சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் மாறுபாடுகாரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி வெயில் என்னும் கத்திரி வெயில் தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள…

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சிக்கு தடை விதித்து உத்தரவு !

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மாணவர்கள் போராட்டம் காரணமாக பதவி விலகி தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. ஷேக் ஹசீனா மீது 42 கொலை வழக்குகள் உள்பட…